Wednesday 27 February 2013

ஜடாமுடியும்
திரி சூலமும்
மூன்றாம் பிறையும்
முக்கண்ணும்
ருத்ராக்ஷமும்
பாம்பும்
தோடும்
உடுக்கையும்,
உமையின் பதி கோபக்காரனை
ஊரறியும் 
கங்கையை தழுவும் காதலனை
யாரறிவார்?

உயரத்திலிருந்து பார்க்கையில்,
சிறியதுதான் 
எல்லாம்!

கைய்யை கிழிக்கும் கள்ளிப்பழம்,
பாதி கடித்து ஓடிய அணில்குஞ்சு
பனித்துளி தாங்கிய தொட்டாவாடி பூ,
தேர்வுமுடிவுகள் வெளியான நாளிதழ்,
கைக்கெட்டும் உயரத்தில்
வேலிக்குள் பழுத்த மாம்பழம் 
தென்னையோலை "பீப்பீ"
பனையோலை காத்தாடி
மயிர் முளைத்த கிளிக்குஞ்சு,
கண்திறக்காத பூனைக்குட்டி,
எல்லா சாயலும் உன்னைப்போலிருக்கும் எதுவும்
உன்னைப்போல் இல்லை,


மனிதம்

பிணத்தை கொத்தும் மீன்கள்,
பிணத்தை கோர்த்த தூண்டில்
பிணத்தை தின்னும் ,
மேலும் சில உயிர்கள்!

ஆந்தையும்.………
வவ்வாலும்…………
காதலனும்!

நினைவுகளற்ற நிலையில்
சொர்க்கம் கைக்கூடுமாம்!
நரகத்தில் வாழ்வதிலெனக்கு
ஆட்சேபனையில்லை!

காத்திருத்தல்

வரிசையாய்
காத்திருக்கின்றன குடங்கள்

"வரும்"

இன்றோ நாளையோ!


குடித்து சிவத்ததோ
அழுது  சிவந்ததோ

நாசமாய் போக, இந்த கண்கள் ,
காட்டிக்கொடுக்கும் எல்லாம்!

அழிந்தொழிந்து போகும் வாய்ப்பை
தவறவிட்டு
"ஏதோ,இருக்கிறேன்" என்பதில் ,
எல்லாமுமாக இருக்கிறேன்!

நான் நாத்திகன்
இனி,
"நீ இல்லை"!

ஒரு புன்னகையும், ஒரு துளி கண்ணீரும்
தழுவி கொஞ்சி கூடக்கிடக்கையில்
தனிமையென்று
பெயரிட்டவன் எவன்?

எதில் குடிக்கிறோம் என்பதல்ல,
எதை குடிக்கிறோம் என்பதில்தான்…………………,

மெது மெதுவாய்
ஏறுகிறது விஷமெனும் போதை,
கொத்திய பாம்போ.,
உடைந்து சிதறி கிடக்கிறது!

"இப்படித்தானே விழுந்தாய்" என்றபடி ,
அங்கொன்றும் இங்கொன்றுமாய் விழுந்தது
நான்ங்கைந்து துள்ளி

முத்தங்களும்
சண்டைகளும்
கோபங்களுமாக.......
தட்டியெடுத்தது .

எந்த துளியில் நின்றதென ,தெரியவில்லை!
முழுதும் நனைத்து
சொட்டிக்கொண்டிருந்தது மழை,

அன்றுபெய்த மழைக்கு
சாட்சியாய்
ஈர மண்ணில்
சில காலடித்தடங்கள்
!

மீண்டுமொரு மழை
தடயம் அழிக்கும் ,

அல்லது;

வேறெங்கேனும் உருவாக்கும்!


காற்றில் கலைந்து விழுந்த முடி
என்னைப்போல.
இயல்பாய் ஒதுக்கிவிட்ட விரல்
உன்னைப்போல!

எல்லோர் பாதையிலும் இருக்கிறது,
சில மேடுகளும்
சில பள்ளங்களும்
பயணம் இனிதாக
சில வாழ்த்துகளும்!

காலை வணக்கங்களும்,
நல்லிரவு செய்தி பரிமாற்றங்களுமாய்,
பாசாங்காய் மாறிவிட்ட
நம் உறவின்மீது
வெக்கை கக்கி கடக்கிறது
பறவைகள் கீச்சிடாத
மதியவேளை

காலை வணக்கங்களும்,
நல்லிரவு செய்தி பரிமாற்றங்களுமாய்,
பாசாங்காய் மாறிவிட்ட
நம் உறவின்மீது
வெக்கை கக்கி கடக்கிறது
பறவைகள் கீச்சிடாத
மதியவேளை

எல்லோருக்காகவும் படித்து,படித்து
அறிவாளி ஆனான்,

எல்லோருக்காகவும் பேசி,பேசி
பேச்சாளானனான்.

எல்லோருக்காகவும் சிந்தித்து சிந்தித்து
சிந்தனாவாதியானான்,

எல்லோருக்காகவும் எழுதி எழுதி
எழுத்தாளனானான்,

பிறிதொரு நாள்,
அறிவாளியும்,
பேச்சாளனும்,
சிந்தனாவாதியும்,
எழுத்தாளனும்,
அரசியல்வாதியும் மரியாதை நிமித்தமாய் சந்தித்து

விருந்து சாப்பிடனர்,
எல்லோருடைய உணவும் தீர்ந்துபோனது!

ஊடலால் ,
சில வார்த்தைகளாய் சுருங்கிவிட்ட
நம் நீண்ட உரையாடல்,
கைப்பேசியை அமர்த்தியபின் ,தொடங்கும்
……………மெளனமாய்!

இரவெல்லாம் ஓய்வின்றி பெய்த மழை ,
காலையில் ஆழ்ந்துறங்கும்,
இலைமேல் சில துளி!

நீ அவர்களின் காலி கோப்பையை நிரப்பு;
இது ஓட்டை குடம்!

நெரிசலில் ;ஒரு திருட்டு பூனை,
தனிமையில்

காதுக்குள் புகுந்த எறும்பு.
காதலும் காமமும்!

உங்களுடைய மழையில்
நனையுங்கள்,
ரசியுங்கள்
கொண்டாடுங்கள்
கவிதையெழுதுங்கள்

என்னுடையது
அமில மழை.

*ஆதாம் ஏவாள் கதை*

மகளை புணர்ந்தவனுக்கு
மரணதண்டணை  கொடுத்திருக்கலாம்,
மகனோடு சல்லாபித்தவளுக்கும்!
பொருந்தா காமங்களெல்லாம் ரசித்துவிட்டு,
மன்னித்து விட்டு விட்டான் மகாபாவி!
கேடு கெட்ட மனித இனம் ,பல்கி பெருகியது!
இறைவனின் கருணையில்
சாத்தானும் பிழைக்கிறான்!

"கருணை காட்டாதீர், ஆண்டவரே"!
ஆமென்!

மூடிய கண்களுக்குள் தொடர்கிறது
சரிந்த முந்தானையை சரி செய்த, சிறுகதை!

நகங்கள் கிழிக்கும்
பற்கள் குதறும் 
பூனைக்குட்டி அழகா என்ன?
எலிகளுக்கு.

ஒரு குழியில் அடங்கிவிடும் ;எல்லாம்!
அளவுகள்தான்
வேறு வேறு!

இங்கு தொலைத்ததை
அங்கே தேடுவது
காதல்!
கிடைக்கும் வாய்ப்பு இல்லவேயில்லை!

"ஓடி பிடிச்சு" விளையாட்டை,
கண்ணாமூச்சியாய் மாற்றிவிடும்
ஏதோ, ஒரு மரணம்! 

வடிவமாய்,
வழுவழுப்பாய் ஒருத்தி
பஜ்ஜி கசக்கிய காகிததில்

கன்னித்திரை கிழித்து
ரத்தம் குடித்து ச்சிரிக்கும்,
சந்தேக பேய்!

நாணல் போல் வாழ்தல் ,நன்மை பயக்கும்!
பச்சோந்திகளை இகழாதீர்!
உன்னை தவிர எல்லாம் தவறு!

நேசிக்கவோ,
வெறுக்கவோ,
எல்லாருக்கும் ஒரு காதலிருக்கும்!

Monday 18 February 2013

ஆடைகள் களைந்து
அணைக்க கைவிரித்த
வானம் போன்றதொரு
காதலுக்கு ,
அன்பை போர்த்திவிடாத
ஏழை இவன்
மகாபாவி!


மொத்த வாழ்வில்
நான் இழந்ததும் சேகரித்ததும்
நீ எனக்காய் சிந்திய
சில துளி கண்ணீரே!

இதயத்தின் வார்த்தைகள் கவிதையென்றால்,
என் இதயம்
உன் பேரைத்தான் கேவுகிறது ,


எல்லா கவிதைகளை விட
உன் பெயர் இனிமை

நான் சந்தித்த உண்மைகளில்
ரணப்படுத்திய உண்மை நீயே!

ஆலையை நெருங்கும்
கரும்பு கட்டு போல
தினம் ,உன் நினைவுகளை நெருங்குது மனம்,

வெல்லத்தின் வாசனையில் மயங்கி
கொதிக்கும் பாவுக்குள் குதித்த
எறும்பின் கதை என்னுடையது,

நான் சந்திக்கும் அடுத்த பெண்
உன்னைப்போல் இருக்ககூடாதென வேண்டுகிறேன்

துரதிர்ஷ்டம்,
எல்லா பொய்களிலும் உன் குரல்
எல்லா ஒப்பனையிலும்
உன் நிழல்,

உன்னுடைய நியாயங்கள் கேட்க மாட்டேன்!

என் கவிதை, எனக்கு சமாதானம்
என் பக்க சார்பு
என் நியாயம்
நான் கேட்கும் பாவமன்னிப்பு .,


"பாத்தியா பாவி, இதுலையும் நீதான் நெறஞ்சிருகே"!

உனக்கு ஒரு பாராட்டு தேவைப்படுகிறது,
நீயென்னை பாராட்ட தொடங்குகிறாய்! 
கவனிப்பு தேவைப்படுகையில்,
என்னை கவனிப்பதுப்போல் காட்டிக்கொள்கிறாய்!
ஒரு விமர்சனத்தின் குறையை ,நீ உணர்கயில்
என்னை விமர்சிக்க தொடங்குகிறாய்!
கொடுத்து பெறுதல் வாழ்வின் வழி !
பெறுவதற்காக கொடுப்பது,
என்ன நியதி???
தேவை, ஒரு கவிதை .
புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு
வெறுமனே கடந்து செல்லும் விதம்
ஒரு கவிதை!
கவிதை போன்றதொரு வாழ்வு!
சுபம்!

ஆஹா, இந்த மரணம் அருமை!!!! நன்றாய் ரசிக்கிறேன்! ஒரு கோப்பை மது, விஷம் போல் பரவும் நீ!

தொலைத்து விட்டேன்!
"எங்கே"
"யாரை"
"எதை"  என்பது பற்றி
நினைவிலில்லை! 
ஒருவேளை,
"என்னை"யாக இருக்ககூடுமோ?

குண்டு பல்பு ,
பீங்கான் கோப்பை,
பீர் பாட்டில்...........
உடைத்து பாழாக்கியிருக்கிறேன் 

எந்த பாதையிலெல்லாம்  கிடக்குதோ!
எத்தனை கால்களை கிழித்ததோ!
நானே உடைத்த,
  என் வாழ்க்கை!,

கூட்டாஞ்சோறை தட்டிவிட்டு,
ஆசையாய் கட்டிய மண் வீட்டை
உடைத்து விட்டு ,
அழுவதை ரசிக்கும் குரூர பயலை
ஏன் இப்படி காதலிக்கிறாள்?

சிவ சிவ

சிவத்தின் குறியில்
உமையின் யோனி
யார்,எங்கு சேர்வாரோ?
எந்த உலகம் பிறக்குமோ?
எந்த உலகம் இருக்குமோ?
எந்த பூ, பூக்குமோ?
யாருக்குத்தெரியும்?
சிவ சிவ!

உமைக்கு மட்டுமே தெரியும்
சிவன் குழந்தையான ரகசியம்!

முற்றாய் அழிவேனென்று
முடிவாய் தெரிந்த பின்தான்
உன் முன் மண்டியிடுவேன்!
அப்போது கூட,
வரமாய்
வாழ்வு தரதே!

என் கவிதையென்பது,
எனக்கு தெரிந்த
நான்கு வார்த்தை!
அந்த நான்கு வார்த்தைகள்,
நான்காயிரம் முறைகள் எழுதப்பட்டு விட்டது! 

சூரிய ஒளியை
உடையாய் உடுத்திய அழுக்கன் ,
பைத்தியமாக இருக்கலாம்!
நான் ,காணதது போல் கடந்து செல்லும் பாதசாரி!
பழிக்கும் அகந்தைக்காரன் !
அவனு(க்கு)ம் அப்படியே!

மாரோடு ,குழந்தை உறங்க
கடைசி பேருந்திற்காக காத்திருக்கிறாள்
ஒரு தாய்,
ஒற்றை ரோஜாவோடு  நானும்!

தேவி


அவள் உருவம்
காளியைப்போல் மாறிவிட்டது!
ஆயிரம் தலை,
கோரை பற்கள்
குடல்கள் குழலாய்,
கபால மாலை.
திரிபுரம் எரித்த
நெற்றிக்கண் வெப்பமாய்
அவள் பார்வை,
உடல் வெந்து கதறுகிறேன் ,நான் .
புழுவை நசுக்குவதாய்
என் நெஞ்சின்மீது ,கால்கள்.
ரத்தம் வழியும்
திரிசூலம் உயர்த்துகயில்
விழித்துவிட்டேன்,
ஹோ,எல்லாம் ஒரு கனா;
என் காதலை போல!

*இரக்கமனம் கொண்டவன் (ள்) ,ஏமாந்து நின்ற கதை*

உன்னிடம் நெருங்க நெருங்க
மேலும் மேலும்
அவளை உணர்கிறேன்,
என் தவறுகளை,
என் அழுக்குகளை,
என் பயங்களை,
என் அவமானங்களை,
என் இயலாமையை,
அடிமைத்தனத்தை,
குரூரத்தை
என்னை உணர்த்திய அவளுக்கு நன்றி !
நேசித்த உனக்கும்!
அவளின் கண்ணீரும்
உன் கரிசனமும்
ஒன்றே தான்!
எனக்கு ஒரு வடு இருக்கிறது,
உனக்கு வேண்டாமது,
சிறு வலி இது , நாளை மறந்துவிடும்!
உன் கண்ணீர் வீழ்த்திய, என் வாழ்க்கை
நாசமாய் போகட்டும்!
இனி எவளோடும் பேச்சில்லை!

பகிர்தல்


உன்னிடமும் இருக்கலாம்,
நீ ,சொல்ல விரும்பாத ஏதோ ஒன்று,
நான் ,கேட்க விரும்பாத ஏதோவொன்று!

Tuesday 5 February 2013

தடியா, அழ வைக்கிரியா!!!!!
உன் சட்டை போட்ட,
சொளக்கொல பொம்மகிட்ட,
பேசமாட்டேன் போ!
பன்னி!

ஆனந்தவர்ஷினி

கண்கள் உருட்டி
நாக்கை புறம் நீட்டி வருகிறது
குட்டிபூதம்.
கண்கள் இறுக்கி, 
பிஞ்சு பல் இறுக,
தன் மென் விரல்களால்
"பிச்சு" வைக்கிறாள்,
மெதுவாய் விசும்ப தொடங்கையில்,

"ம்மா, அப்பாவெ, பூதா……பிச்சு" என்றபடி
சமையலறைக்கு ஓடுகிறாள்.
எல்லா வீட்டிலும் இருந்திருக்கும்
ஒரு குட்டி பூதம்,
எல்லார் வீட்டிலும் இருக்கக்கூடும்
குட்டியாகவோ,
பெரிதாகவோ
ஒரு தேவதை!


உண்மையை உணர்ந்த பிறகும்
பொய்யோடு உறவாடுகிறோம்,
அந்த பொய்யே
உண்மையாக ஆகக்கூடும் என்ற
ஆசைகளில் ,
நம்பிக்கையில்,
போதையில்!

"கல் நெஞ்சக்காரன்"
இது அவள் சொன்னது!
"கொல்வதை கலையாய் கொண்டவன்"
இவள் சொன்னது!
இன்னொருத்திக்காக காத்திருக்கிறேன்!
மேற்பூச்சுகள் இல்லாமல் ,
என்னை குற்றவாளியாக்கி
கொலைகயிறு வாங்கி தருபவளை!

அடாவாடி பிள்ளையை பெற்று
அவமான பட்ட தாய் போல ,
எனக்கான காதல் ,
பெற்று வளர்த்த உன் இதயம்
அசிங்கப்பட்டு வாடிப்போய் நிற்க்கக்கூடும்!

மலடியாய் இருந்திருக்கலாம் நீ,
மனதளவில்!
மன்னித்து விடு தோழி!
:'-(

நான் பின்னிய வலை,
நான் வெட்டிய குழி,
உன் பங்கு குறைவுதான்!

எதை விழுங்கியதால்,
நகரமுடியாமல்
தவிக்கிறதோ
இந்த பாம்பு

என்,அர லூசு ,
என் பக்கத்திலியே இருக்கிரா மாரி(மாதிரி)
"நல்ல , நெலா வெளிச்சம்!

மேகம்

அந்திமாலை நேரம் போல,
நூல் மேல் நடக்கிறாய் நீ 
இரு வேறான
உலகங்கள் நடுவே!
உன் முகத்தின் உண்மை பிரகாசம்
என் உலகின் எல்லா இருளையும்
தீர்க்கவல்லது,
உன் பொய்யின் பெருங்குரலோ,
என் மனதின் பள்ளத்தாக்குளில்
அழிக்கமுடியா எதிரொலிகள்!
"வினைக்கு எப்போதும்
எதிர்வினை உண்டு"!
உனக்கும் எனக்கும் !
அனுபவிப்போம்.

மேடையில் , திரை விழ,
ஒப்பனை கலைத்த நடிகர்க்கு,
அன்றாட கவலைகள் பற்றிக்கொள்ள ,
விலகுகிறோம்!
உனக்கு நான் மேடை,
எனக்கு நீயும்.
விலகுதல் இயல்பென ஆனபிறகு
முதல் முடிவை
நீயெடுத்தலென்ன,
நானெடுத்தாலென்ன?
வார்த்தைகளுக்கும், வலிகளுக்கும்
அர்த்தமேயில்லை!
கோபம் நல்லதில்லையாம்,
சில கோபம்
நன்மைக்கு அழைத்து செல்லுதே!
நேசம் நன்மை தருமாம்,
சில நேசம் ஆன்மாவை அழிக்கிறதே,
எது எப்படியோ,
காதலெனும் நாடகத்தில்
இனி நான் நடிப்பதாயில்லை ,
இரட்டை வேடத்தில்.
நவரசங்களின் பாத்திர படைப்பில் இணைந்திருப்பவளே!
உனக்காக ஒரு முறை .........
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!