என் பக்கத்து நியாயங்களை யோசனை கூட செய்யாமல்
முள் வார்த்தைகளை வீடு முழுதும் எறிந்தாய்.
வாசலில் தானே நின்றிருந்தேன் ,
ஏதும் பேசாது "வெடுக்" கென கிளம்பி சென்றாய்.
"சாப்டியாடீ?" மதியத்து தொலைபேசிக்காய் காத்திருந்தேன்.
அவரைக்காய் பொரியலை பற்றி ,
ஏதும் சொல்லாமல்
திரும்பி படுத்திருக்கிறாய் .
பாப்பா, சாப்பிட்டாளாவென்று கேட்க கூட தோன்றவில்லை ,உனக்கு !!!
உன் முன் கோபம் ,
முரட்டுத்தனம் ,
குருட்டு பிடிவாதம்
இவற்றையெல்லாம் விட ,அதீதமான அன்பை
என் மீது வைத்திருக்கிறாயென்று தெரியும் .
அதுபோல் இல்லையெனினும் ,உளறிக்கொட்டாதே.
அப்படி நம்பிக்கிடப்பதில் ,எனக்கொரு நிம்மதி!