உன்னை கட்டிக்கொண்டு
சிரித்துப்பேசி மகிழ்ந்திருப்பது
இனிக்கிறது தான்
இருந்தாலும்
நீயில்லாத நேரங்களில்
பாழாய்போன
உன் காதலை கட்டிக்கொண்டு அழுவதுதான் எனக்கு
பெரும்பாடாய் இருக்கிறது.
Saturday 30 November 2013
ப்போடா, நீயும் உன் காதலும்
வியாதி
காதல் என்பது
ஏதேனும்
சந்தேக வியாதியா என்ன?
அவனில்லாத என்னை
"நான்தானா"வென்று
நானே சந்தேகித்து தொலைப்பதை என்ன சொல்ல?
காரணம்
சொல்லி பயனிலா சொல்லை
சொல்லாதே
என்கிறான் வள்ளுவன்
அவளி(னி)டம்
சொல்ல தவறிவிட்ட சொற்களை
கவிதையாக்குவதால்
ஒரு நிம்மதி.
கீச்சு
"கீச்சு"
அவன் அருகிலில்லாத இந்த அதிகாலையில்
ஏன் இந்த புழுதீனி குருவிகள்
இப்படி கூச்சலிடுகின்றன?
நேற்று இப்படியில்லையே!
Subscribe to:
Posts (Atom)