"குட்டி பாப்பா, எப்டீமா பொறக்குது?"
ஆங்……………
"என் உயிர எடுக்கரதே,
அப்பனுக்கும் , பொண்ணுக்கும்,
வேலையா போச்சு"!!!!
ரெண்டுத்துக்கும்
அதே குறுக்கு புத்தி! :-p
"குட்டி பாப்பா, எப்டீமா பொறக்குது?"
ஆங்……………
"என் உயிர எடுக்கரதே,
அப்பனுக்கும் , பொண்ணுக்கும்,
வேலையா போச்சு"!!!!
ரெண்டுத்துக்கும்
அதே குறுக்கு புத்தி! :-p
லாட்டரி
முடிவுக்கு
காத்திருக்கும்
குடிகாரன்!
மகப்பேறு
அறைக்கு
வெளியில்
கணவன்!
இரண்டும் கெட்ட நிலையில் காத்திருக்கிறேன்!
என்னவானதோ,
என்னவளே,உன்
எழுத்து தேர்வு????
மறைத்து வைத்த புத்தகத்துள்,
மயிலிறகு பார்க்கும்
சிறுவன் போல,……
தொடுதிரை கைபேசியை
திறந்து பார்க்கிறேன்!
அன்பு பார்வையும்,
அழகு சிரிப்புமாய்,
குறும்பாய் ,
கண்ணடித்து
கதையொன்று சொல்லும்
என் குட்டி மயிலறகு
நீ!
கன்னம் தடவி,
புன்னகைத்து
சட்டை பையில் ஒளித்து வைக்கிறேன்!
"நெஞ்சுக்குள் குதிக்குதுன்
"முத்த குட்டி"!
தாகமெடுத்த
ரத்தகாட்டேரி போல் ,
பயம்காட்டி
பிடுங்கி விடுவான்
எப்போதுமே!
எப்போதாவது,
நானாக கொடுக்கயில்,
புளிப்பு மிட்டாய்
சாப்பிடும்
சிறுவனாய்
குதூகல முகம் காட்டி
, "இன்னும்"என்கிறான்
!!!
" முத்த பசி "தீராத,
என் செல்ல பிசாசு!
இனியும் ,
கவிதைகள்
எழுதுவதாய்
இல்லை நான்!
இருவரும் ,
ஒன்றான
தனிமை தருணங்களில்,
தோள் சாய்ந்து,
மார் சாய்ந்து,
மடி சாய்ந்த
கணங்களின்
"கல்லறை தோட்டம் "
என் "பாழாய் போன கவிதைகள்" !
இனியும்
கவிதைகள் எழுதுவதாய்
இல்லை நான்!
"குண்டூசியால் குத்தி குத்தி கொலை செய்கிறாய்.
உன் கோபப்பார்வைகளும்,
நீ விட்டு சென்ற,
தனிமை தருணங்களும் ,
வேறென்னவாம்???
உறக்கத்தில் சிரிப்பதாக,
அம்மா சொன்னாள்,
கண்ணடிக்கிறான்,
கைபிடிக்கிறான்,
கள்வனவன் கனவுகளை ,
எப்படி விரட்ட???
"கேஸ் முடிஞ்சிது"!
"பருப்பு தீந்துது"!
"முட்டை இல்லே"!
நெஞ்சழுத்தக்காரி,
காலையிலிருந்து,
ஒரு வார்த்த பேசல,
"ஏன்டி, என்னடி ஊம்பிரச்சினெ???"
"அந்த வயலட் சாரிக்கு மேட்ச்சா ஆ ஆ……………"
"அய்யயோ, நீ என்னமோ பண்ணு"
"நா வேனுன்னா,
கடைக்கு போயி,
ரெண்டு முட்டெ
வாங்கீட்டு வரட்டுமா?"
சுபம்!
வாகனங்கள் கடக்கும் ,
பாலத்தின் நடுக்கம்.
கசக்கி எறிந்த காகிதத்தில் ,
நான்கு வரி கவிதை.
புதைகுழியில் சிக்கிகொண்ட,
வாயில்லா ஜீவன்.
நீ விலகிசென்ற தடம் பார்த்து………………
அலையாய் தவமிருக்கும் ,
கடல்!
கார்பன் பேப்பரில்,
நிலா வரைந்து ,
"இரவென்று" சொன்ன
"சிவ சித்தார்த்தன்"
என் மகன்,
கணக்கில் "வீக்"காம்,
மிஸ் சொன்னாள்!
"எப்பிடிடா இப்படி கவிதெ எழுதரே?
எங்கிருந்து கெடைக்குது இதெல்லா???"
"ஊங்கிட்டிருந்து தான்"
"போடா, பொய் சொல்லாத!"
****
" என் கவிதெயெல்லாம் எப்பிடிருக்கு?"
"குட்டி,குட்டியா ஆட்டு புளுக்க போல அழகா இருக்கு!"
என் கவிதை ஊற்று அவளை தவிற வேறு யாராக இருக்கக்கூடும்!!"""
ஒரு குருட்டு தைரியம் தான்;
எல்லா பெண்களையும் போல,
அவளையும், கடந்து விடலாமென்று!
" காணாமல் போனவர்கள் "
பட்டியலில்
"எம் பேரு எத்தனாவது?"
பிணமாக்கி எரிக்குதடா என்னை,
உன் மீதான காதல்,
உயிர்வார்த்தை சொல்லிவிட,
எத்தனிக்கிறேன்,
"வெட்டியானின் மூங்கில் தடியாய்"
அலட்சிய புன்னகை!
கண்ணன் என்ன பெரிய "புடுங்கியா"???
ஆண்டாள் எப்படியோ போகட்டும்,
நீ ஏனடி பாடி தொலைக்கிறாய்???
நீ, "மூஞ்சியை தூக்கி வைத்திருக்கும்"
அழகுக்காக,
முப்பது கவிதை சொல்லலாம்!
தலைமுடி பிடித்திழுத்து,
புஜம் கடித்து,
முதுகில்
குத்தோ,குத்தென்று
குத்தி தீர்த்து,
தலையணை சண்டைக்கிழுப்பாயே;
ராட்சசி!
"ஆள விடு சாமி!, கவிதைன்னா என்ன?"
தகமெடுக்கும்;
குடிக்கமுடியாது,
கள்ளுபான தட்டிவிடும்!
பசியெடுக்கும்;
திங்கமுடியாது!
கறிசோர கொட்டிவிடும்!
பொண்டு புள்ளைகள
பொடணீல அடிக்கும்,
வாய்க்கா பக்கம் ,
வண்டிமாடு சண்டி பண்ணும்,
வரப்பு பக்கம் வா ,வா னு கத்திகிட்டோடும்,
ஊருக்கு தெரியாதில்லே,
கதிரேசன் செத்த கதே
மீனாட்சி பெத்த கதெ!
ஒதுங்கிய கூரையின்
உள் நுழைந்து,
இண்டு இடுக்கு வழி
பயணம் செய்து,
எதிர்பாரததொரு தருணத்தில்,
என் தலை குட்டி
சிரித்ததொரு
பெருமழை!
பதிநெட்டாம் நாள்,
அமைதி திரும்பியது.
கெளரவர்கள் அழிந்தனர்,
பாண்டவர்கள் அழிந்தனர்,
"அமைதிக்கான அணுகுண்டு"
வைத்திருந்த
கண்ணனும் அழிந்தான்!
புல்லும் இல்லை,
புள்ளும் இல்லை,
அமைதி திரும்பியது ………
……
………
… பேரமைதி!
முகவரி மாற்றி சென்று விட்டாள்,
தன் முகம் தொலைத்தவள்,
புதிய முகம்,
புதிய முகவரி,
வேறென்ன??? எப்போதும் போல,
மீண்டும் தொலைப்பாள்!