Monday 28 May 2012

#மீதமிருக்கும் நாட்கள்#



என் வாழ்வின் மிக சிறந்த கணங்கள்.....
உன்னோடு பழகிய நாட்கள்,
மறக்க முயல்கிறேன்!
மிக வேண்ட்ப்பட்டவளாகவும்,
தேவையற்றவளாகவும்
உருமாறி திரிகிறாய்...நீ.
வசந்தகாலத்து பூந்தோட்டத்தில் மரித்து கிடக்கும் பட்டாம்பூச்சி.,
என் காதல்!
மீதமிருக்கும் என் நாட்கள் யாருக்கானவை?
வரமோ சாபமோ,
உன் நினைவுகளெனும்
மாயையில் வாழ்கிறேன்;
சர்க்கரை பரணியில்
சிக்கிக்கொண்ட
ஒரு எறும்பை போல!


Thursday 3 May 2012

சவத்தின் மீது வீசிய பூக்கள்,
சாலையெங்கும் நசுங்கி கிடக்கும்!
வாகனங்களின் சக்கரம் போலவேதான்
உன் ஏளனப்பார்வையும்!

Wednesday 2 May 2012

குடியிருந்த கோவில்.


நீ காலி செய்துபோன வீட்டைப்பார்த்து
காதல் வளர்க்கிறேன்,
கோபுரம் பார்த்து
இறைவனை நினைக்கும்
பக்தன் போல!