Tuesday 15 February 2011

நாசமாய் போக

சொற்களும் தராது ,
சொல்லும் வாய்ப்பும் தராது
காதல் மட்டும் தந்து
கழுத்தறுத்த
கடவுள்.

Monday 14 February 2011

நீ......தீ .
உள்ளுள் ஊர்ந்து
உயிரை நீற்றும்
உமித்தீ .
என்  வீட்டுக்கு செல்லும் வழியில்,
ஒரு கோவில் ,
ஒரு தென்னந்தோப்பு ,
ஒரு ஆறு ,
ஒரு பேருந்து நிறுத்தம் ,
ஒரு செண்பகமரம் ......
இவைகளை தவிர
என்னால் உடைந்து போன
சில வளையல் துண்டுகளும்
உனக்காய் காத்திருக்கின்றன . 
மழை ,நதி ,வெள்ளம் , கடல் ......
நீரின்றி அமையாது உலகு .
காதல் மழை ,
வெட்க நதி ,
உணர்ச்சி பெருவெள்ளம் ,
உணர்வு பெருங்கடல் .......
நீயின்றி அமையாது என் உலகு.

கருணை கொலை

"என்னை விட நல்ல பெண் கிடைப்பாள் "
"கடைசி வரை நட்போடு இருப்போம் "
நன்றி தோழியே ,
எனக்கான விஷத்தில்
தேன் கலக்கும்
உன் கருணைக்கு .

Monday 7 February 2011

ஒரு பகல் ஆந்தை போல
தனிமையில் மௌனமாய்
பயங்காட்டும் ..... உன் ஊடல் .
உன் கால் சுற்றும் பூனை போல
 செல்லமாய் .....என் கூடல் .

இடைவெளி

இரு வார்த்தைகளுக்கான
இடைவெளியில் நாம்
சேர்ந்திருக்கிறோம் ,
இருவேறு வார்த்தைகள் போல .
நெரிசலான சாலையில்
குருட்டு பிச்சைக்காரன் போல ...
நீ இல்லாத நாட்கள் .

unakkum

உனக்கும்  எனக்குமான
மழை இனிமை ..... குடையும் .
உனக்கும் எனக்குமான
வெயில் சுகம் .... துப்பட்டாவும் .
உனக்கும் எனக்குமான
தனிமைகூட நன்று ..... நினைவுகளும் .
உனக்கும் எனக்குமான காற்றில்
சுவாசத்தை என்ன செய்வது ?