என் வீட்டுக்கு செல்லும் வழியில்,
ஒரு கோவில் ,
ஒரு தென்னந்தோப்பு ,
ஒரு ஆறு ,
ஒரு பேருந்து நிறுத்தம் ,
ஒரு செண்பகமரம் ......
இவைகளை தவிர
என்னால் உடைந்து போன
சில வளையல் துண்டுகளும்
உனக்காய் காத்திருக்கின்றன .
மழை ,நதி ,வெள்ளம் , கடல் ......
நீரின்றி அமையாது உலகு .
காதல் மழை ,
வெட்க நதி ,
உணர்ச்சி பெருவெள்ளம் ,
உணர்வு பெருங்கடல் .......
நீயின்றி அமையாது என் உலகு.