Monday 30 July 2012

வாசலில் காயவைத்த நெல்லை
கொத்தி தின்னுகிரதொரு பெட்டை கோழி,
என் மீதமான நாட்களை
கொத்தி தின்னும்
உன் நினைவுகள் போல!


"டாம்,டாம்"
"யாரது?"
"பேயிது"
"என்னா வேண்டும்?"
"நகை வேண்டும்"
"என்னா நகை?"
"கலர் நகை"
"என்னா கலர்?"
.
.
.
.
.
"நீலக்கலர்"

"அய்யயோ தொட்டுக்கோ,
இல்லே பேய் புடிச்சிரும்"
ஓடி வந்தெனக்கு பாவடை நுணியை தந்தாயே,
அன்றெனை பிடித்த தேவதை நீ!!! <3


எதிர்வரும் உன்னிடம்
புன்னகைத்து கடக்கும்
இந்த பாதையில்,
வெள்ளை கோடுகளுக்கு என்ன வேலை???
தயக்க ஊர்தாண்டி
நீ நில்,
மெளன ஊர்தாண்டி
நான் வருவேன்!! இணைந்த பாதையில்
சேர்ந்தே பயணிப்போம்,
சாலைகள் முடிவதில்லை!!!

Friday 20 July 2012

கடந்தகாலம் ,
குற்றஉணர்வும்,
தாழ்வு மனப்பாண்மையும்
என்னை முழுமயாய் குடித்து வீசிய
காலி பாட்டில்!
நிகழ்காலம்;
உன் நினைவுகளின் காலடியில் நசுங்கும்
மீதமான சிகரெட்!!!
அன்பே, என் எதிர்காலம் நீதான்;
எதிர்காலம் என்பதில்
ஆழமான அர்த்தம்

  "மரணம்"தானே???


ஊடல் முடிந்து,
கூடல் தொடர்ந்து,
இரவுகள் நீண்டதொரு
காலையில்
ஈரக்கூந்தலும்,
கள்ளச்சிரிப்பும்,
செல்ல கோபமுமாய்,
காபி கலந்து தரும் அழகே,
உன் காபியில் கலந்திருக்கிறதடி,
என் காதலின் வாசனை!!!!


ஊடல் முடிந்து,
கூடல் தொடர்ந்து,
இரவுகள் நீண்டதொரு
காலையில்
ஈரக்கூந்தலும்,
கள்ளச்சிரிப்பும்,
செல்ல கோபமுமாய்,
காபி கலந்து தரும் அழகே,
உன் காபியில் கலந்திருக்கிறதடி,
என் காதலின் வாசனை!!!!


Wednesday 18 July 2012

வாடிய பூக்களை 
சூடியிருக்கிறாயா நீ???
என் காதலை தூக்கி
குப்பை தொட்டியில் போடு!!!!!
இன்னொருவன் காதலியாக
தன்னை அடையாள படுத்தி கொண்டவள் தானே நீ!!!!
எனக்கும் இன்னொரு காதல் வரக்கூடாதா????
அவமான சொற்க்களால்
குத்தி கிழித்து குற்றுயிரும் குலையுயிருமாய்
வீசி சென்றாய் என்னை!!!!
இப்போதோ,
என்னை பார்க்கையில்
உன் இமைகள் படபடக்கிறதே, ஏன்???
உன் உடல் மொழிகள்
மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது , ஏன்???? 
நான் வாழ உன் நினைவுகள் மட்டுமே போதுமானது,
நீ தேவையேயில்லை!!!!
ஆனாலும் உன்னை நேசிக்கிறேன்!!!
உன் அழகிலோ ,
ஆசை வார்த்தைகளிலொ,
மயங்குவேன் என நினைக்காதே!!!
உணர்ந்து உருகும் ஒரு துளி கண்ணீரின் மதிப்பு,
என் முதல் காதலின்
முதல் முத்தம்!!!!
அதுவரை விலகி போ!!!
நானும் மெளனமாக காத்திருப்பேன்!!!
காதலோடு!!!


Tuesday 10 July 2012

நெறய சாப்டாத்தான் சீக்க்ரமா பெரிய பொண்ணாவ,
ஸ்கூலுக்கெல்லா போலா"
சொல்லி
தன் பிஞ்சு விரல்களால்
சோற்றை என் மூஞ்சி முழுதும் தேய்க்கிறாள்.
ம்ம்ம்ம்ம் என்று முரண்டு பிடிக்க,
கண்களை அகல விரித்து ,
நாக்கை நீட்டி
பூச்சாண்டியிடம்  என்னை கொடுப்பதாக சொல்கிறாள்!
நான் அழ துவங்கவே,
சும்மானாச்சிக்கும் சொன்னேன் சொல்லி
நெற்றி முத்தம் தருகிறாள்!!!!!
பிறக்கட்டும் எனக்கு ஒரு அன்னபூரணி!