Tuesday 10 July 2012

நெறய சாப்டாத்தான் சீக்க்ரமா பெரிய பொண்ணாவ,
ஸ்கூலுக்கெல்லா போலா"
சொல்லி
தன் பிஞ்சு விரல்களால்
சோற்றை என் மூஞ்சி முழுதும் தேய்க்கிறாள்.
ம்ம்ம்ம்ம் என்று முரண்டு பிடிக்க,
கண்களை அகல விரித்து ,
நாக்கை நீட்டி
பூச்சாண்டியிடம்  என்னை கொடுப்பதாக சொல்கிறாள்!
நான் அழ துவங்கவே,
சும்மானாச்சிக்கும் சொன்னேன் சொல்லி
நெற்றி முத்தம் தருகிறாள்!!!!!
பிறக்கட்டும் எனக்கு ஒரு அன்னபூரணி!


No comments:

Post a Comment