Friday 28 September 2012

wallpaper


மறைத்து வைத்த புத்தகத்துள்,
மயிலிறகு பார்க்கும்
சிறுவன் போல,……
தொடுதிரை கைபேசியை
திறந்து பார்க்கிறேன்!
அன்பு பார்வையும்,
அழகு சிரிப்புமாய்,
குறும்பாய் ,
கண்ணடித்து
கதையொன்று சொல்லும்
என் குட்டி மயிலறகு
நீ!
கன்னம் தடவி,
புன்னகைத்து
சட்டை பையில் ஒளித்து வைக்கிறேன்!
"நெஞ்சுக்குள் குதிக்குதுன்

"முத்த குட்டி"!


No comments:

Post a Comment