Wednesday 5 September 2012

துர்மரணம்

தகமெடுக்கும்;
குடிக்கமுடியாது,
கள்ளுபான தட்டிவிடும்!
பசியெடுக்கும்;
திங்கமுடியாது!
கறிசோர கொட்டிவிடும்!
பொண்டு புள்ளைகள
பொடணீல அடிக்கும், 
வாய்க்கா பக்கம் ,
வண்டிமாடு சண்டி பண்ணும்,
வரப்பு பக்கம் வா ,வா னு  கத்திகிட்டோடும்,
ஊருக்கு தெரியாதில்லே,
கதிரேசன் செத்த கதே
மீனாட்சி பெத்த கதெ!

No comments:

Post a Comment