Wednesday, 4 September 2013

ஆறுதல்

என் பக்கத்து நியாயங்களை யோசனை கூட செய்யாமல்
முள் வார்த்தைகளை வீடு முழுதும் எறிந்தாய்.

வாசலில் தானே நின்றிருந்தேன் ,
ஏதும் பேசாது "வெடுக்" கென கிளம்பி சென்றாய்.

"சாப்டியாடீ?"  மதியத்து தொலைபேசிக்காய் காத்திருந்தேன். 

அவரைக்காய் பொரியலை பற்றி ,
ஏதும் சொல்லாமல்
திரும்பி படுத்திருக்கிறாய் .

பாப்பா, சாப்பிட்டாளாவென்று கேட்க கூட  தோன்றவில்லை ,உனக்கு  !!! 

உன் முன்  கோபம்  ,
முரட்டுத்தனம் ,
குருட்டு பிடிவாதம்
இவற்றையெல்லாம் விட ,அதீதமான அன்பை
என் மீது வைத்திருக்கிறாயென்று தெரியும் .
அதுபோல் இல்லையெனினும் ,உளறிக்கொட்டாதே.

அப்படி நம்பிக்கிடப்பதில் ,எனக்கொரு நிம்மதி!

No comments:

Post a Comment