Wednesday 27 February 2013

"இப்படித்தானே விழுந்தாய்" என்றபடி ,
அங்கொன்றும் இங்கொன்றுமாய் விழுந்தது
நான்ங்கைந்து துள்ளி

முத்தங்களும்
சண்டைகளும்
கோபங்களுமாக.......
தட்டியெடுத்தது .

எந்த துளியில் நின்றதென ,தெரியவில்லை!
முழுதும் நனைத்து
சொட்டிக்கொண்டிருந்தது மழை,

அன்றுபெய்த மழைக்கு
சாட்சியாய்
ஈர மண்ணில்
சில காலடித்தடங்கள்
!

மீண்டுமொரு மழை
தடயம் அழிக்கும் ,

அல்லது;

வேறெங்கேனும் உருவாக்கும்!

No comments:

Post a Comment