மொத்த வாழ்வில்
நான் இழந்ததும் சேகரித்ததும்
நீ எனக்காய் சிந்திய
சில துளி கண்ணீரே!
இதயத்தின் வார்த்தைகள் கவிதையென்றால்,
என் இதயம்
உன் பேரைத்தான் கேவுகிறது ,
எல்லா கவிதைகளை விட
உன் பெயர் இனிமை
நான் சந்தித்த உண்மைகளில்
ரணப்படுத்திய உண்மை நீயே!
ஆலையை நெருங்கும்
கரும்பு கட்டு போல
தினம் ,உன் நினைவுகளை நெருங்குது மனம்,
வெல்லத்தின் வாசனையில் மயங்கி
கொதிக்கும் பாவுக்குள் குதித்த
எறும்பின் கதை என்னுடையது,
நான் சந்திக்கும் அடுத்த பெண்
உன்னைப்போல் இருக்ககூடாதென வேண்டுகிறேன்
துரதிர்ஷ்டம்,
எல்லா பொய்களிலும் உன் குரல்
எல்லா ஒப்பனையிலும்
உன் நிழல்,
உன்னுடைய நியாயங்கள் கேட்க மாட்டேன்!
என் கவிதை, எனக்கு சமாதானம்
என் பக்க சார்பு
என் நியாயம்
நான் கேட்கும் பாவமன்னிப்பு .,
"பாத்தியா பாவி, இதுலையும் நீதான் நெறஞ்சிருகே"!
No comments:
Post a Comment