Tuesday 5 February 2013

மேகம்

அந்திமாலை நேரம் போல,
நூல் மேல் நடக்கிறாய் நீ 
இரு வேறான
உலகங்கள் நடுவே!
உன் முகத்தின் உண்மை பிரகாசம்
என் உலகின் எல்லா இருளையும்
தீர்க்கவல்லது,
உன் பொய்யின் பெருங்குரலோ,
என் மனதின் பள்ளத்தாக்குளில்
அழிக்கமுடியா எதிரொலிகள்!
"வினைக்கு எப்போதும்
எதிர்வினை உண்டு"!
உனக்கும் எனக்கும் !
அனுபவிப்போம்.

மேடையில் , திரை விழ,
ஒப்பனை கலைத்த நடிகர்க்கு,
அன்றாட கவலைகள் பற்றிக்கொள்ள ,
விலகுகிறோம்!
உனக்கு நான் மேடை,
எனக்கு நீயும்.
விலகுதல் இயல்பென ஆனபிறகு
முதல் முடிவை
நீயெடுத்தலென்ன,
நானெடுத்தாலென்ன?
வார்த்தைகளுக்கும், வலிகளுக்கும்
அர்த்தமேயில்லை!
கோபம் நல்லதில்லையாம்,
சில கோபம்
நன்மைக்கு அழைத்து செல்லுதே!
நேசம் நன்மை தருமாம்,
சில நேசம் ஆன்மாவை அழிக்கிறதே,
எது எப்படியோ,
காதலெனும் நாடகத்தில்
இனி நான் நடிப்பதாயில்லை ,
இரட்டை வேடத்தில்.
நவரசங்களின் பாத்திர படைப்பில் இணைந்திருப்பவளே!
உனக்காக ஒரு முறை .........
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!


No comments:

Post a Comment