Tuesday 29 January 2013

நாற்றமெடுக்கும் கவிதைகள்!



ரோஜாப்பூமாலைகளினூடே காண்பாய்,
முகமூடிகள் கழன்ற
என் பிணத்தின் அவலட்சண முகம்,
அருவருக்கத்தக்க முகம்.
பன்னீர், ஊதுபத்திகள் தாண்டி
நாசி துளைக்கும் நான் பாடிய கவிதைகளின் நாற்றம்,
வாழ்வெனும் கவிதையின்
பிணநாற்றம்!
கொஞ்சம் பொறுத்துக்கொள்,
எறிந்தடங்கிய சாம்பல்
உன்னைபோலிருக்கும்; ஏதுமற்று!


No comments:

Post a Comment