Tuesday 29 January 2013

மகாயானம்!

எதிர்பார்த்ததெல்லாம்
நடந்தேறி விடுகின்றது ,
எதிபாராததொரு கணத்தில் !
ஜனனம்
நட்பு
காதல்
கோபம்
பிரிவு
மரணம்…………… அமைதி…………
மெளனம் ……………

இங்கே முடிந்த கதை,
எங்கேனும் தொடரக்கூடும் .
நகர்தல் காற்றுக்கும்
தொடர்தல் பயணத்திற்க்கும்
பேரியல்பு!
இது பித்ருயானம்
இது தேவயானம் 
இதுவே மகாயானம்!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!


No comments:

Post a Comment