Monday 18 February 2013

தேவி


அவள் உருவம்
காளியைப்போல் மாறிவிட்டது!
ஆயிரம் தலை,
கோரை பற்கள்
குடல்கள் குழலாய்,
கபால மாலை.
திரிபுரம் எரித்த
நெற்றிக்கண் வெப்பமாய்
அவள் பார்வை,
உடல் வெந்து கதறுகிறேன் ,நான் .
புழுவை நசுக்குவதாய்
என் நெஞ்சின்மீது ,கால்கள்.
ரத்தம் வழியும்
திரிசூலம் உயர்த்துகயில்
விழித்துவிட்டேன்,
ஹோ,எல்லாம் ஒரு கனா;
என் காதலை போல!

No comments:

Post a Comment