Monday 18 February 2013

*இரக்கமனம் கொண்டவன் (ள்) ,ஏமாந்து நின்ற கதை*

உன்னிடம் நெருங்க நெருங்க
மேலும் மேலும்
அவளை உணர்கிறேன்,
என் தவறுகளை,
என் அழுக்குகளை,
என் பயங்களை,
என் அவமானங்களை,
என் இயலாமையை,
அடிமைத்தனத்தை,
குரூரத்தை
என்னை உணர்த்திய அவளுக்கு நன்றி !
நேசித்த உனக்கும்!
அவளின் கண்ணீரும்
உன் கரிசனமும்
ஒன்றே தான்!
எனக்கு ஒரு வடு இருக்கிறது,
உனக்கு வேண்டாமது,
சிறு வலி இது , நாளை மறந்துவிடும்!
உன் கண்ணீர் வீழ்த்திய, என் வாழ்க்கை
நாசமாய் போகட்டும்!
இனி எவளோடும் பேச்சில்லை!

No comments:

Post a Comment