எல்லோருக்காகவும் படித்து,படித்து
அறிவாளி ஆனான்,
எல்லோருக்காகவும் பேசி,பேசி
பேச்சாளானனான்.
எல்லோருக்காகவும் சிந்தித்து சிந்தித்து
சிந்தனாவாதியானான்,
எல்லோருக்காகவும் எழுதி எழுதி
எழுத்தாளனானான்,
பிறிதொரு நாள்,
அறிவாளியும்,
பேச்சாளனும்,
சிந்தனாவாதியும்,
எழுத்தாளனும்,
அரசியல்வாதியும் மரியாதை நிமித்தமாய் சந்தித்து
விருந்து சாப்பிடனர்,
எல்லோருடைய உணவும் தீர்ந்துபோனது!
No comments:
Post a Comment