Saturday 2 January 2016

ஆனந்தியெனும் குட்டிதேவதை

வஞ்சனையும்
வன்மங்களும்
பொய்களும்
பிளாஸ்டிக் குப்பைகளும்
துரித உணவுகளும்
போலி புகழ்தல்களும்
வாகன இரைச்சல்களும்
நியான் வெளிச்சங்களும்
வசவு சொற்களும்
நிறைந்த  இந்த பெரு நகரத்தின்
சுழலில் சிக்கி பிதுங்கி
திரும்ப வீடு வருகையில்

வாசல் வந்து சினேகமாய் புன்னகைத்து
வரவேற்பாயே, அந்த ஒற்றை புன்னகை
போதுமாய் இருக்கிறது
நான் இன்னும் உயிரோடிருக்க

No comments:

Post a Comment