முதல் துளி பட்டதும்
உயிர் சிலிர்க்கும்
ஒரு புல்லின் வேராய்
எல்லா மழையிலும்
உன்னை எண்ணி சிலிர்க்கிறேன்
ஒரு மழையென்பது
கோடி கோடி துளிகளாலானது
இருவரும் பங்கிடும் முத்தங்களால்
நம் காதலும் ஒரு பெருமழை போல் தானே கோணவாச்சீ
நீ கொட்டி தரும் முத்த துளிகளில்
முழுக்க நனைகிறேன்
ஒரு மலை முகட்டை போல
பொங்கி வழிந்து அடித்து நுரைத்து
என்னையே அடித்து செல்கிறது
என்னுள் எழும் ஒரு காட்டாறு
உன் காதலெனும் காட்டாறு
No comments:
Post a Comment