Wednesday 23 September 2015

ஏதேதோ

கிளையில் அமர்ந்திருக்கும் ஒற்றை காகம்
கள்ளிச்செடியின் நிழல்
அசைபோட்டு படுத்திருக்கும் பசு
செடிகளையும் இலைகளையும் சுற்றிவந்து
பூக்கள் தேடும் பட்டாம்பூச்சி
காற்றில் அலைகழிந்து படபடக்கும் அதன் மென் சிறகுகள்
மின்சார கம்பியில் அமர்ந்திருக்கும் ரெட்டைவால் குருவி
-
-
-
-
-
-
-
ஏதேதோ எழுதி தனிமை கடக்கிறேன்  நான்

நீ என்ன செய்துகொண்டிறாய் கோணவாச்சீ?

No comments:

Post a Comment