விழுந்து
எழுந்து
விழுந்து
நடை பழகும் குழந்தை
விழுதலும் எழுதலும் திரும்ப விழுதலும்
சலிப்பதேயில்லை பிள்ளைக்கு
நடப்பது ,மிக சுவாரசியம்
பெரும் லக்ஷ்யம்
இல்லையெனில்
பெரும் பயணத்தின் முதல் தொடக்கம்
எல்லோரும் அன்பின் பிள்ளைகள்
நடை பழகியபடியே இருக்கிறோம்
வாழ்நாள் முழுதும்
காதலின் உலகில்!
No comments:
Post a Comment