Tuesday 11 June 2013

மழையளவு

அப்பாவ எவ்ளவுடா புடிக்கும் ? 

தன் பிஞ்சு கையை
அகல விரித்து
"இவ்ளோ" என்று சொல்லிவிட்டு
ஓடிவந்து முத்தமிட்டாள் .

"உனக்குடி?
புடிச்சிருந்த ஒரு முத்தங்குடு" .

ஆமா, இந்த மூஞ்சிய புடிச்சிட்டாலும்,
அது ஒண்ணுதான் கொறச்சலு"

அன்று இரவு ,நல்ல மழை!

No comments:

Post a Comment