Tuesday 11 June 2013

மழை நின்ற பின் ஒரு சிகரெட்



இப்பொழுதெல்லாம்
மழையில் நனைவதில்லை
மழையை ரசிப்பதில்லை
மழைக்கவிதைகள்
முழுதாய் வாசிப்பதில்லை
வெறும் ,வேடிக்கை மட்டும்தான்
அமைதியாக அமர்ந்து
அப்படியே பார்த்துக்கொண்டிருப்பேன்
அதுதான் பிடிக்கிறது
மெதுவாய்
மெது மெதுவாய்
உள்ளங்காலிலிருந்து உச்சிக்கு ஏறும்
அந்த குளுமை
அது,
அதுதான்
மழைநேரத்தில்
தேவையாக இருக்கிறது,
கல்யாணமான புதிதில் ,இவள்
தேநீர் எடுத்து வந்தாள்
பறக்கும் அந்த ஆவியும்
அந்த கதகதப்பும் அன்றைய மழைநாளின்
உன்னுடைய மூச்சுக்காற்றை
நினைவுபடுத்தியதிலிருந்து
நான் இப்படிதான்!

No comments:

Post a Comment