Friday 17 May 2013

எனக்கு தெரியும் ,
வாழ்க்கை ஒரு பந்தையமல்ல;
நெடும்பயணம்.

தோளோடு தோள் நின்று
மகிழ்விக்கும் தோழன் போல ,
அன்பாய்
மேடு பள்ளங்களில்
பதறாமல் கூட வரும்
மனைவி போல
என் வழிப்பயணத்திற்க்கு
நம்பி எடுக்கிரேன்
என் புல்லட்டை! 
*****
எனக்கு தெரியும்
இந்த பாதை எனக்கனது மட்டுமல்ல,
உங்களுக்கானது ,
அவருக்கானது,
அவளுக்கானது,
தன் பாதையை
தானே போட்டு செல்லும்
ஒரு பட்டாம் பூச்சிக்குமானதென்று
என் புல்லட்
யாருக்கும் தொல்லை தராத
எல்லோருடைய பாதையிலும் செல்லும் .
******'*
350cc யின் அபரிதமான ஆற்றல்
100cc க்கு வழி தந்து
"டாட்டா"காட்டும். 

அகம்பாவத்தில்
அரைகூவல்விட்டுச்செல்லும் அவர்களுக்கு 
பெரும் பணிவு கொண்ட ,வாயுபுத்ரனை புரியாது 
*****
மழை வருவது
மயிலுக்கும் தவளைக்கும் தெரிவது போல
தூரத்தில் நான் வருவதும்
என் அன்பர்களுக்கு தெரியும்  .  

******
புல்லட்டை
தொடக்குவதும் இயக்குவதும்
ஒரு கலை,
ஒரு தியனம் !
இயக்கத்தில் ,
புல்லட்டின் சப்தத்தில் கரைந்து
காணாமல் போய்
பயணம் மட்டுமே மீதமிருப்பது
"ஜென்"!

*******

இளையராஜாவை பாடியபடி
குளிர்காற்று முத்தமிட
பிற வாகனங்களற்ற புறவழியில்
பெளர்ணமி  நிலா வெளிச்சத்தில்
பைக்கில் பயணத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் 

புல்லட்டில் பயணிப்பவர்கள்
வரம் பெற்றவர்கள்!

"டுப் , டுப் , டுப், டுப்"! 

No comments:

Post a Comment