Monday, 21 January 2013

*கேட்பவர்களுக்காக ஒரு கதை*

ஒரு உலகம்
ஒரேயொரு உலகம்,
கோடி உலகம்
கோடிகோடி உலகம்!
ஒற்றை உலகை தொலைத்தவன்
காணாமல் போனான்,
தேடுவது அபத்தம் ,
தொலைத்தல் அபத்தம்
தொலைவது மிகச்சரி!
அழியட்டும் உலகம்,
எல்லாம் மாயை!
கரையில் பதிந்த
கால்தடங்கள் பொய்!
நீ பார்க்காத
உன் கால் தடங்கள் மெய்!
கரை நிறைத்த கால் தடங்கள் ,
கடலில்லை!


No comments:

Post a Comment