ஆசைகள் அனைத்தையும் விட்டுவிட,
ஆசைப்பட்டார் புத்தரென்று,
யாரோ சொல்லக்கேட்டேன்,
"அது சித்தார்த்தனென்று"சொல்ல
வாயெடுக்கையில்
அமைதியாய் கடந்து சென்றார் புத்தர்,
நானும் வந்து விட்டேன்.
அவர்களுக்காக
அங்கேயே ,மிதந்து கொண்டிருக்கலாம்,
புத்தர் பூத்த
புன்னகை வாசம்!
No comments:
Post a Comment