Monday, 21 January 2013

மந்திர புன்னகை

ஆசைகள் அனைத்தையும் விட்டுவிட,
ஆசைப்பட்டார் புத்தரென்று,
யாரோ சொல்லக்கேட்டேன்,
"அது சித்தார்த்தனென்று"சொல்ல
வாயெடுக்கையில்

அமைதியாய் கடந்து சென்றார் புத்தர்,

நானும் வந்து விட்டேன். 
அவர்களுக்காக
அங்கேயே ,மிதந்து கொண்டிருக்கலாம்,
புத்தர் பூத்த
புன்னகை வாசம்!


No comments:

Post a Comment