Monday 24 December 2012

ஆனந்தியில்லா உலகு



ஆனந்தவர்ஷினி
"போ" "போ" என்றதும்,
கிளம்புகிறது பேருந்து.
இருசக்கர வாகனம்,
தும்பி ,
தாத்தா பாட்டி,
விமானம்,
அணில்,
யாரையும்……எதையும் ,
விடுவதாக இல்லை
"டாட்டாக்காரி"! 
அவளின் கையசைப்புக்காக
வீட்டையே சுற்றி சுற்றி வந்து ,
பார்வையில் கூட படாத
பருந்து,
ஏதேனும் உச்சி கிளையில்
உறங்காமலிருக்கலாம்,
வானம் பார்த்தபடி!


No comments:

Post a Comment