உன் முகம் மறந்து விட்டது.
உன் குரல் பரிச்சயமில்லை.
முத்தங்கள் சிலிர்க்கவில்லை.
பிரிவு வலிக்கவில்லை.
ஏதுமற்ற நிலையை தந்தருளினாய், நன்றி!
நாய், கிழித்தாலென்னா?
நான்கு பேர் எடுத்தாலென்ன?
சவங்களுக்கு உணர்ச்சியில்லை!
சில வார்த்தைகள் மீதி, சாம்பலை போல்
"எல்லாம் என் தவறு"!
No comments:
Post a Comment