Tuesday, 25 December 2012

ஒரு ஓவியம் வரை;
கறுப்பு உடையில்
கண்ணீர் பரிசளிக்களிக்கும்
தேவதையின் ஓவியம்.
அவள் பற்களில்
ரத்த சிவப்பு கலந்து வரை.,
மறந்து விடாதே,
அவள் தேவதை,
அழகாக வரை!
முரண்கள் ,உன் துரிகைக்கு புதிதென்றால்,
கதை எழுது!
அபத்தமாய் ,ஒரு காதல் கதை.
"முட்டாளின் காதல்" என்று
தலைப்பு வை!
சிரிக்காதே!
என் தேவதை!
நான் கேட்ட வரம் !
என் காதல் !
என் வாழ்க்கை!
மேலும் சிரிக்காதே,
உன் உலகம் அழியாததில் ,மகிழ்ச்சி.
என் வீடு இடிந்ததில் ,புலம்பல்!
விட்டு விலகி போ ,

நான் பைத்தியம்!

சிரிப்பும் , அழுகையும், புலம்பலும் சகஜம்!


No comments:

Post a Comment