Monday 10 December 2012

*பிரிதலுக்கு பின்*



முதுகுதண்டு வழி உச்சியேரிய ,
முத்த சிலிர்ப்பு நினைவுகள் ,
ரத்தம் உறைக்கும்!
உன் மூச்சின் சூடுபட்ட மேனியெங்கும் ,
எரியும்!
உனக்கு பிடித்த சாம்பார் வாசனை,
நீ செல்லம் கொஞ்சி கடித்த ,இடக்கழுத்து,
பிடித்திழுத்த புடவை நுனி,
விரல் கோதி ஒதுக்கிவிடும் ,
என் அடங்கா சுருள்முடி…………
என்ன சொல்ல???
என்னவனே,
காதலின் பற்களின் கூர்மை ,
மிக,மிக அதிகம்!


No comments:

Post a Comment