Sunday 25 November 2012

*தாமரை குளம்*

சேம்பின் இலைகள் , விரிந்து நிற்க,
அல்லிக்கொடிகள் ,படர்ந்து கிடக்க,
தாமரைப்பூ
பூத்து நிறையும்……… இலைகள் மேய்ந்த பாழ்குளம்!
அல்லி கூம்ப., பகலவன் ரசிக்க
தாமரை விரியும்,
தாமரை கூம்ப, அல்லி விரிய
வெண்ணிலா ரசிக்கும்!
பகலும் , இரவும் மாறி,மாறி கடக்கும்!
கரையோரம் ரசித்துவிட்டு,
கால்கூட கழுகாமல்
கடந்து போக,
தேங்கி கிடக்கும்
அழுக்குத்தண்ணீர்!
குளத்தின் மெளனம்,
வலியோ? காத்திருப்போ?
மழையறியும் ரகசியங்கள்!
நீ இறங்க பயக்கும்
காதல் சகதியில்
கவிதை பூத்த ,
பாழ்குளம் நான்! என் அன்பு,
அது,வெறும் அழுக்கு தண்ணீர்!


No comments:

Post a Comment