Monday 15 October 2012

மியாவ்!

அடுக்களையில்
பாத்திரம் உருட்டி
ரகளை செய்யும்,
"குடிச்சிருக்கியா"? கேட்டு
கோபம் கொண்ட
பூனை குட்டி!

***'

ஊடல் நாட்களில்
படுக்கை ஓரத்தில்
சுருண்டு படுக்கும் ........
அழுது களைத்த
பூனைக்குட்டி!
வாரியணைக்க ;
பிரண்டி வைக்கும்!

*****

லேசாய் கடித்து,
சண்டைக்கிழுக்கும்........
தேகம் குறுக்கி ,
தயாராகும் …………
பால் வாசனைக்கு
கால் சுற்றும்!

"உலக அழகி ,
நீதானென்று ,
கவிதையொன்றை தட்டிவிட
கோபம் மறந்து
கட்டிகொள்ளும்
"கொஞ்சம்"
பெரிதாய் வளர்ந்த
பூனைக்குட்டி!


No comments:

Post a Comment