Wednesday 23 September 2015

என்னவள்

நான் உன்னில் மயங்கி கிடக்கிறேனடி தோழி என்றேன்
மார்போடு சேர்ந்தபடி
"தெரியும்" என்றாள்
"நானும் , நானும்" என்று கத்தவும் முணுமுணுக்கவும் தொடங்கியது
மல்லிகை பூவும்
கொலுசும்
ஸ்டிக்கர் பொட்டும்
ஜிமிக்கியும்
மோதிரமும்
வளையலும்

நல்லவேளை அவளுக்கு கேட்கவில்லை

இந்த உலகில் அவளையே நினைத்துக்கொண்டிருக்கும்
ஒற்றை ஜீவன் நான் மட்டுமேயென
நினைத்து மொத்த காதலையும்
என்னில் பொழிகிறாள்

No comments:

Post a Comment