"எப்பாவது என்ட்ட பொய் சொல்லிருக்கியா?" என்று கேட்டாயே,
"ம்", உன்னை பார்க்காமல்
உன்னோடு பேசாமல்
என்னால் இருக்க முடியும் என்றேனே…………
பொய் தான்.
உன் மேல் காதலில்லை என்பதும்
நீ அழகாயில்லை என்பதும்
உன்னை முத்தமிட எண்ணமில்லை என்பதும்
எல்லாமே பெரும் பொய்.
No comments:
Post a Comment