என் வீட்டு மாமரத்தின் கீச்சுக்குருவிகள்
தூரத்தில் மின்னும் ஒற்றை நட்ச்சத்திரம்
தாவணி சீருடை மாணவிகள்
ஓயாது பேசும் எப் எம் தொகுப்பாளினி
தந்தை தோளுறங்கும் குட்டி பாப்பா
காதலனை இறுக்கியமர்ந்த பைக் யுவதி
மகனை கைபிடித்து அழைத்து செல்லும் இளந்தாய்
இவைகளும் இவர்களும்
எனக்கு உன் தோற்றம் தருதடி
"வாயாடிப்பாறு".........
உன் வீட்டு ஜன்னலோரம்
கண்ணாடி குடுவைக்குள்
ஓடி பிடித்து விளையாடும்
ஜோடி மீன்களை பார்க்கையில்
அன்பே என்னை நினைப்பாயா?
No comments:
Post a Comment