நாளொன்றுக்கு என்னை
ஒரு முறை பார்த்தால் போதும்
குளத்தில் விழுந்த முதல் மழைத்துளியின் வட்டம் போல.
அய்யோ, பெருமழைகாரா
உன்னை பார்க்கும் அவகாசம்கூட எனக்கு தராது
அப்படி ,என்னையே பார்த்துக்கொண்டிருக்காதே
"பார்க்காதே "என்று நான் சொல்வதால்
பார்க்காமலுமிருக்காதே
நீ பார்ப்பதும் ஒரு சுகம்
உன்னை பார்ப்பதும் ஒரு சுகம்
"பார்க்கமாட்டானா" என்று ஏங்கி தவிப்பதும்
ஒரு சுகம் .
No comments:
Post a Comment