திருமண புகைப்படங்களை
முழுதாய் பார்த்தபின்
தன்னை காணவில்லையென
அழத்தொடங்குகிறாள்
ஆனந்தவர்ஷினி குட்டி
மாலைமாற்றி,
விரல் கோர்த்து
கட்டில் சுற்றிவந்து
கன்னத்தில் ஆசி வாங்கி
மீண்டுமொருமுறை நடந்தேறியது
மகள் தலைமையில்
எங்கள் திருமணம்!
"தம்பி பாப்பா வேணுமா?
தங்கச்சி பாப்பா வேணுமா?"
கேட்டுக்கொண்டிருக்கயில்
வெட்கத்தில் சிணுங்குகிறாள்
புதுப்பெண்.
No comments:
Post a Comment