Tuesday 11 June 2013

அப்பாவி கடவுள்

இப்பொழுதெல்லாம்
'அற்புதங்கள்' செய்வதில்லை கடவுள்.
'அற்புதம்'செய்து செய்து
களைப்புற்ற கடவுள் !
வரிசையில் நின்ற பக்தர்களிடம்
கண்ணை திறந்து பார்க்க சொல்லி
பெருங்கோபம் கொண்டு
காட்டு கத்து கத்தினார்
பின் சில நேரம் ,
அழுதுகொண்டிருந்தார்.
கொஞ்ச நாட்கள் ,'சிரிப்போ சிரிப்பு' .
கடவுளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாம்
கல்லால் அடித்தனர் ,ஜனங்கள் .

பொழுதெல்லாம் அமைதியாகி விட்டார்
யார் ,என்ன கேட்டாலும்
பதிலாக ,வெறும் புன்னகை மட்டும்தான்.
கல்லடி பட்ட காயம் ,
'வலிக்குதா' என்று கேட்டேன்
அதற்கும் புன்னகை.

No comments:

Post a Comment