Tuesday 11 June 2013

நான்

வார்த்தைகள் குறைந்துவிட்டது,
நம்மிடையே .
சகித்துக்கொள்ளும் மெளனம்
நிரம்பிக்கிடக்கிறது .
உறுதியற்று தளர்கிறது
உடல் .
காலின் கீழ் நழுவுகிறது ,பூமி .
வெளியெங்கும் ,வெற்று புன்னகை .
காய்ந்து போன செடிகள் மட்டுமே
தென்பட்டுக்கொண்டிருந்த 
நிராகரிப்பின் சாலையில் 
சலிப்பும் விரக்தியும் சுட்டெரிக்கும் பாறை மேல்
பச்சை பசேலென "ஒரு கள்ளிச்செடி"
நான் உயிரோடிருக்கிறேன்!
மிக்க மகிழ்ச்சி.

No comments:

Post a Comment