நீ ,போ!
எந்த புகார்களுமில்லை எனக்கு.
கடைசி முடியும் ,நரைத்துப்போகும் காலம் வரும்
அப்போது வருவேன் .
உன் மகனை ,
"மகனே" என்றழைத்து விசாரிப்பேன்
உன்னைப்பற்றி!
அவனுக்கு "அம்மா" என்றழைக்க சொல்லிக்கொடு ,
அது போதும்!
நீ போ
எந்த புகார்களுமில்லையெனக்கு.
No comments:
Post a Comment