Friday 19 April 2013

the receptionist





வரவேற்ப்பாளினியாய் வேலை செய்யும் அவள்,
ஒரு ஒற்றை புன்னகைகூட தந்ததில்லை எனக்கு ,
திரும்ப திரும்ப கேட்கப்படும் ,சலிப்பூட்டும்
அதே பத்து கேள்விகளுக்கு
சலிக்காத மொழியில் புன்னகைத்தபடி
நிறுவன தொலைபேசியில் பதிலளிக்கிறாள்! 
வளர வளர பறிக்கப்படும் தேயிலை போல,
அவள் புன்சிரிப்பும் பறிக்கபடுகின்றன! 
நிறுவன வாடிக்கையாளனின்
தின்னும் பார்வைகளை பொறுத்தபடி
அவனுக்கும் புன்னகையாய் பதிலளிக்கிறாள்,
பறித்து முகரப்படும் ஒரு பூவாய்
மீண்டும் மீண்டும் அவள் புன்னகை,
புன்னகையெல்லாம் புண்ணாய் மாறிப்போன
ஏதோ ஒரு தருணத்தில்
அவள் புன்னகைப்பதை மறந்திருக்கக்கூடும்,
அவள் எனக்காய்
ஒரு புன்னகை கூட தந்ததில்லை,
காதலின் அடையாளமாய்,
எரிந்து விழுந்தால்கூடப்போதும்
ஏற்றுக்கொள்வேனென்று
யாரேனும் சொல்லுங்களேன்
அந்த வரவேற்பாளினி காதலியிடம்!

No comments:

Post a Comment