Friday 19 April 2013

துரிதமாய் வேலை செய்கையில்
அடிபட்டு
"குபுக்"கென பீறிடும்
ரத்த துளிகள் போல,
என் நினைவுகள்
அவளுக்கு வரவழைத்திருக்கலாம்
கண்ணீரை
விரல்களில் துணிசுற்றி
"பாத்து வேல செய்ய மாட்டியா!"
என்று ஆதங்கப்படும்
ஓரு நட்பு என் அருகிலிருப்பதுபோல்,
ஆறுதல் படுத்தவோ
அணைக்கவோ,
அவளுக்கும் கொடு
ஒரு நட்போ, காதலோ
வேண்டுவதற்க்கு வேறொன்றுமில்லை இனி
வெகுதூரம் கடந்தபிறகு!

No comments:

Post a Comment