Friday, 19 April 2013

அனாதை கவிதைகள்

அதே பழைய கதைதான்!
வார்த்தைகளில் புகாத,
அர்த்தங்கள் விளங்காத
குறை பிரசவத்தில்
பிறந்த கவிதையொன்றை
நேற்று ,எங்கோ வீசி விட்டேன்.

வளர்ந்து பெரியவனாகி
இன்று காலை வந்து
என் முகத்தில் உமிழ்ந்துவிட்டு போனதது!

No comments:

Post a Comment