Friday 19 April 2013

அனாதை கவிதைகள்

அதே பழைய கதைதான்!
வார்த்தைகளில் புகாத,
அர்த்தங்கள் விளங்காத
குறை பிரசவத்தில்
பிறந்த கவிதையொன்றை
நேற்று ,எங்கோ வீசி விட்டேன்.

வளர்ந்து பெரியவனாகி
இன்று காலை வந்து
என் முகத்தில் உமிழ்ந்துவிட்டு போனதது!

No comments:

Post a Comment