அந்த நிலையத்தின்
கடைசி தொடர் வண்டியில்
நானும் ஏறிய பின்னே,
தனியாக அமர்ந்து
தண்டவாளங்களை பார்த்தபடி
என்ன நினைத்துக்கொண்டிருக்குமோ
அந்த நடைமேடை இருக்கை .
தனிமை ,தற்கொலை எண்ணத்தை தூண்டுமோ?
அல்லது ,தனிமையில் இருப்பதே
ஒரு வித தற்க்கொலைதானோ?
யாருமற்ற கடற்கரையில்
அலையும் காற்றும் பேசுமோ என்னவோ!
யாரும், யாருமற்று வாழ்வதில்லை
எப்போதும்!
அடுத்த தொடர்வண்டி வரும்வரை.
அடுத்த சிறுவன் காத்தாடி விடும்வரை,
அடுத்த குழந்தை
கால் நனைத்து விளையாடும்வரை
இருக்கையும் ,காற்றும் ,அலையும் போல
நானும் காத்திருப்பேன் ,
ஒரு நாள் வரும் ;
நீயும் வருவாய்!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
No comments:
Post a Comment