உன்னை கொஞ்சும் வார்த்தைகளை,
ஒரு குழந்தையிடமோ,
பூவிடமோ,
நிலவிடமோ
நண்பர்களிடமோ கூறி விடலாம் ,
உனக்கே உனக்கு மட்டுமான
வசை சொற்களை
யாரிடம் பங்கிட முடியும்?
விட்டு விலகி
தனிமையில் நடக்கும்
இத்தருணத்தில்
"நாய் "என்பதும்
"எருமை" என்பதும்
"பிசாசு "என்பதும்
என்னை மட்டுமே குறிக்குமென
வசை சொற்க்களெல்லாம்
என்னை வசைபாட தொடங்குகின்றன.
No comments:
Post a Comment