Saturday 6 April 2013

அவனை ஏன் முத்தமிட அனுமதிப்பதில்லை?

 

# முத்தத்திலிருந்துதான் தொடங்குவான்

#ஏதேதோ கதைபேசி கன்னம் கிள்ளுவான்

# முத்தம் கொடுக்க அனுமதித்தால் கடித்து வைப்பான்

# கன்னத்துக்கும் உதட்டுக்கும் அதிக தூரம் இல்லையென்பான்.

#ஒரு கோடி முத்தம் தர ஆசையென்று சொல்லி , ஒன்றோடு நிறுத்துவான்,

#அந்த ஒரு முத்ததில் ஆசை தூண்டி ஒராயிரம் கேட்க வைப்பான்

# அழகழகாய் கவிதை சொல்லி , சிறகொன்றை பரிசளிப்பான்,

#கிளுகிளுப்பாய் கதைசொல்லி கிச்சு கிச்சு மூட்டுவான்,

#இன்னும்…………இன்னும் ......... எத்தனை காரணங்கள் ,
அது தனிமையில் வெட்கங்கள்,
ரகசிய புன்னகைகள்.

#படுபாவி, கொலைகாரன்

அவனை முத்தமிட அனுமதிக்கவும் இதுவெல்லாம்தான் காரணம்!

No comments:

Post a Comment