# முத்தத்திலிருந்துதான் தொடங்குவான்
#ஏதேதோ கதைபேசி கன்னம் கிள்ளுவான்
# முத்தம் கொடுக்க அனுமதித்தால் கடித்து வைப்பான்
# கன்னத்துக்கும் உதட்டுக்கும் அதிக தூரம் இல்லையென்பான்.
#ஒரு கோடி முத்தம் தர ஆசையென்று சொல்லி , ஒன்றோடு நிறுத்துவான்,
#அந்த ஒரு முத்ததில் ஆசை தூண்டி ஒராயிரம் கேட்க வைப்பான்
# அழகழகாய் கவிதை சொல்லி , சிறகொன்றை பரிசளிப்பான்,
#கிளுகிளுப்பாய் கதைசொல்லி கிச்சு கிச்சு மூட்டுவான்,
#இன்னும்…………இன்னும் ......... எத்தனை காரணங்கள் ,
அது தனிமையில் வெட்கங்கள்,
ரகசிய புன்னகைகள்.
#படுபாவி, கொலைகாரன்
அவனை முத்தமிட அனுமதிக்கவும் இதுவெல்லாம்தான் காரணம்!
No comments:
Post a Comment