உணர்ச்சிபெருக்காய் எழுதிய கவிஞன்
உயிரோடிருந்தான்,
கொந்தளித்த கூட்டத்தில்
ஒருவன் கதை
பாழாய்ப்போன கதை!
***
ராஜ போஜனம் முடித்து
ராணியோடு சல்லாபித்து ,
ஆசுவாசமாய் உறங்கியெழுந்து
இன்று காலை கொண்டுவந்தான்
எங்களுக்கான புரட்சிகவிதை!
***
தியாகியென்றும்
போராளியென்றும்
ஊரே உன்னை கொண்டாட,
கரிக்கட்டையாய்
மீதம் கிடக்குதோ
அம்மா வைத்த திர்ஷ்டி பொட்டு?
No comments:
Post a Comment