Tuesday 26 March 2013

உணர்ச்சிபெருக்காய் எழுதிய கவிஞன்
உயிரோடிருந்தான், 
கொந்தளித்த கூட்டத்தில்
ஒருவன் கதை
பாழாய்ப்போன கதை!

***

ராஜ போஜனம் முடித்து
ராணியோடு  சல்லாபித்து ,
ஆசுவாசமாய் உறங்கியெழுந்து
இன்று காலை கொண்டுவந்தான்
எங்களுக்கான புரட்சிகவிதை!

***

தியாகியென்றும்
போராளியென்றும்
ஊரே உன்னை கொண்டாட,
கரிக்கட்டையாய்
மீதம் கிடக்குதோ
அம்மா வைத்த திர்ஷ்டி பொட்டு?

No comments:

Post a Comment