Wednesday 13 March 2013

*சித்தார்த்தன் கதை*

யசோதரையின்
கண்ணீரில் வளர்ந்த
முட்செடிகளினூடே ,
கெளதம சித்தார்தன் பயணம் தொடர்ந்தான்,
பல யுகப்பயணம்,
ஆடை கிழிந்து
கால்கள் இடறி,
ஊணின்றி ,
உறக்கமின்றி
பலயுகம் !
அழுது களைத்த யசோதர
அழுகை துறக்க,
களைப்படைந்த சித்தார்த்தன்
பயணம் துறந்தான்,
மர நிழலில் ஓய்வெடுத்த
கெளதமன் தலையில்
உச்சிகிளை குருவியொன்று
எச்சமிட்டது!

வசந்தகாலத்தில்
பூக்களின் பாதையில்
திரும்பி வந்தான் புத்தன்!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

No comments:

Post a Comment